விதிகளை மீறிய விக்கி - நயன்தாரா தம்பதி… விரைவில் வழக்குப்பதிவு?

Nayanthara Tamil Cinema Vignesh Shivan
By Thahir Oct 10, 2022 07:37 AM GMT
Report

விக்கி - நயன்தாரா தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

காதல் திருமணம் 

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியினர் கடந்த ஜுன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

விதிகளை மீறிய விக்கி - நயன்தாரா தம்பதி… விரைவில் வழக்குப்பதிவு? | Vicky Nayanthara Couple Who Broke The Rules

திருமணத்தில் ஒட்டுமொத்த திரையுலகமே கலந்து கொண்டது. பின்னர் இருவரும் ஹனிமூன் கொண்டாடுவதற்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர். பின்னர் இந்தியா திரும்பிய நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர்.

அம்மாவான நயன்தாரா

இந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரட்டை குழந்தை பிறந்திருப்பதாகவும், தாங்கள் அம்மா, அப்பா ஆகிவிட்டோம்,என தெரிவித்துள்ளனர்.

விதிகளை மீறிய விக்கி - நயன்தாரா தம்பதி… விரைவில் வழக்குப்பதிவு? | Vicky Nayanthara Couple Who Broke The Rules

அவர்களின் இந்த அறிவிப்பு திரைவட்டாரத்திலும் அவர்களது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் விக்கி - நயன்தாரா ஜோடி விதிகளை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விதிமுறைகள் என்ன?

வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள என்ன விதிமுறைகள் என்பதை பார்க்கலாம்.

* திருமணமாகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்.

* தம்பதியில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியற்றவராக இருக்க வேண்டும்.

* தம்பதிக்கு வாடகைத்தாய்க்கும் தகுதிச் சான்றிதழ் கட்டாயம்.

* ஒரு பெண், ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும்.

* நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும்.

* வாடகைத்தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்.

மேற்கண்ட விதிமுறைகளை நடைமுறையில் உள்ள நிலையில் இவற்றை விக்கி- நயன்தாரா ஜோடி பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விதிகளை மீறிய விக்கி - நயன்தாரா தம்பதி… விரைவில் வழக்குப்பதிவு? | Vicky Nayanthara Couple Who Broke The Rules

விதிகளை மீறியுள்ளதால் விக்கி - நயன்தாரா ஜோடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.