வேளச்சேரியில் மறுவாக்குப் பதிவு தொடங்கியது
சென்னை வேளச்சேரியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கடந்த 6-ம் தேதி வாக்குப்பதிவு நாளன்று, சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியிலிருந்து, 3 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரம் இருசக்கர வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக, மாநகராட்சி உதவி பொறியாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும்.அந்த வாக்குச்சாவடியில் 17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குப்பதிவு மையத்திற்கு, மின்னணு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டன.

ஆண்களுக்கான அந்த வாக்குச்சாவடியில், காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறு உள்ளது .இதையொட்டி, அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.