இனியும் குஷ்பு நாவடகத்துடன் பேசவில்லை என்றால் - வீரலட்சுமி எச்சரிக்கை!!

Tamil nadu Kushboo
By Karthick Nov 28, 2023 06:19 PM GMT
Report

சேரி என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு பேசியது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அதற்கு வீரலட்சுமி ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

குஷ்பு கருத்து

அண்மையில் குஷ்பு தனது சமூகவலைதளப்பக்கத்தில் "சேரி" மொழி என குறிப்பிட்டிருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குஷ்புவின் அந்த பதிவிற்கு பல்வேறு அமைப்பினர் கண்டனங்களைத் தெரிவித்தனர். இது தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி செய்தியாளர்களைச் சந்தித்து இது குறித்து பேசினார்.

veerlakshmi-warning-to-kushboo

அப்போது, "இந்த விவகாரத்தில் ஏற்கனவே மற்ற அமைப்பினர் குஷ்பு மீது அளித்த புகார்கள் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமையின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிலையில், எங்கள் சார்பில் அளித்த மனுவின் அடிப்படையில், சைபர் கிரைம் பிரிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறினார்.

வீரலட்சுமி கண்டனம்

தொடர்ந்து பேசிய அவர், மும்பையிலிருந்து படத்தில் நடிக்க தமிழகத்திற்கு வந்துவிட்டு, தமிழ் கலாச்சாரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது என தனது கண்டனத்தை தெரிவித்து, தமிழ் கலாச்சாரத்தையும், தமிழ் மக்களையும் இழிவாகப் பேசியதற்கு, நடிகை குஷ்பு தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

veerlakshmi-warning-to-kushboo

மேலும், "மன்சூர் அலிகான் - த்ரிஷா குறித்து பேசியதற்கு கொந்தளித்த குஷ்பு, தமிழகப் பெண்கள் மீது அக்கறை இருந்திருந்தால் இப்படி இழிவாகப் பேசி இருக்க மாட்டார் என குற்றம்சாட்டி, இனி வரும் காலங்கலில் நடிகை குஷ்பு நாவடக்கத்தோடு பேசவில்லை என்றால், கடும் கண்டனம் தெரிவிக்கப்படும்என எச்சரிக்கை விடுத்துள்ளார்.