என் படைய கூட்டிட்டு வந்தனா...வட மாவட்டத்தில் கால் வைக்கவே முடியாது...வீரலட்சுமி ஆவேசம்..!
நாம் தமிழர் கட்சி சீமான் மீது தான் கொடுத்த புகாரை விஜயலக்ஷ்மி திரும்ப பெற்றுள்ள நிலையில், வீரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார்.
வாபஸ் பெற்ற விஜயலக்ஷ்மி
தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அடுக்கடுக்கான புகார்களை நடிகை விஜயலக்ஷ்மி வைத்திட அதற்கு தமிழர் முன்னேற்றப்படைத்தலைவர் வீரலட்சுமி உதவியாக இருந்தார்.
கடந்த சில வாரங்களாக இது குறித்து பெரும் முரண்பாடான கருத்துக்கள் இரு தரப்பில் இருந்தும் கூறப்பட்டு வந்த நிலையில், தான் அளித்த புகாரை நடிகை விஜயலக்ஷ்மி திடீரென வாபஸ் பெற்றுள்ளார். இந்நிலையில், இது குறித்து தமிழர் முன்னேற்றப்படைத்தலைவர் தலைவர் வீரலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார்.
விஜயலட்சுமி காலில் விழுந்த சீமான்
அப்போது பேசிய அவர், விஜயலட்சுமியின் காலில் விழுந்து சீமான் சமாதானம் ஆகிவிட்டார் என்றும் இந்த விவகாரத்தில் அவர் முற்றிலும் தோற்றுவிட்டார் என்று தெரிவித்தார். மேலும், போலீசார் காலிலும், அரசாங்கத்தின் காலில் விழுவதை விட, விஜயலட்சுமி காலில் விழுந்து சீமான் இந்த விவகாரத்தில் முற்றிலும் தோற்று விட்டார் என சுட்டிக்காட்டிய அவர், இரண்டாவது முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்றால் போலீசார் தன்னை கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்கள் என்ற பயத்தில் தான் சீமான் இவ்வாறு செய்து உள்ளார் வீரலட்சுமி கூறினார்.
மேலும், இந்த விவகாரத்தில் தான் ஏன் சீமானிடம் காசு வாங்கவேண்டும் என கேட்ட வீரலட்சுமி, தன்னிடம் உள்ள படையை தான் திரட்டி வந்தால், நாம் தமிழர் கட்சியால் வடதமிழகத்தில் கால் வைக்கமுடியாது என்றும், தேவையில்லாத பூச்சாண்டி காட்டும் வேலையை தன்னிடம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.