ஆபாச வீடியோ எடுத்தவரின் பிறப்புறுப்பை அறுப்பேன் கையில் அரிவாளை எடுத்த வீரலட்சுமி.. மிரட்டும் வீடியோ

By Irumporai Jul 17, 2021 12:24 PM GMT
Report

ஆபாச வீடியோ அனுப்பியவர்களுக்கு அரபு நாட்டு பாணியில் தண்டனை கொடுக்க போவதாக வீரலட்சுமி மிரட்டல் வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழர் முன்னேற்றப்படை என்ற அமைப்பின் நிறுவனர் வீரலெட்சுமி.

 பிரபாகரன் சிலை அகற்றிய விவகாரம், ஆந்திராவில் தமிழர் படுகொலை என தமிழகத்தில் பரபரப்பு நிகழ்வுகளின் மூலம் ஊடக்ங்களின் கவனத்தை கவர்ந்தவர் வீரலெட்சுமி

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் "மை இந்தியா பார்ட்டி" சார்பிலும் போட்டியிட்டவர்.

தேர்தல் சமயத்தில், இவரது வாட்ஸ்அப் நம்பருக்கு ஆபாச வீடியோக்கள் மர்ம நபர் யாரோ அனுப்பியுள்ளனர்.

இது குறித்து வீரலட்சுமி, போலீசில் புகார் அளித்துள்ளார். போலிசார் இது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில் வீரலெட்சுமி ஒரு வீடியோவினை வெளியிட்டார்

அந்த வீடியோவில் எனக்கு ஆபாச வீடியோ அனுப்பியவர் யார் என்று தெரியவில்லை. அவரை 3 நாட்களில் போலீசார் கைது செய்ய வேண்டும்.இல்லாவிட்டால் நானே அந்த நபரை கண்டுபிடித்து, தூக்கிட்டு வந்து நிர்வாணமாக பல்லாவரம் மார்க்கெட்டில் கட்டி வைத்து, பிறப்புறுப்பையும் அறுத்து, சோஷியல் மீடியாவிலும் வெளியிடுவேன்" என மிரட்டல் விடுத்திருந்தார்.

தற்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் அதில், கையில் அரிவாளை எடுத்துஏற்கனவே இதுபோற் சம்பவங்களில் புகார் தந்தேன்.

ஆனால் போலீசார் எதுவுமே நடவடிக்கை எடுக்கவில்லை இப்போது வீடியோ அனுப்பிய நபர்கள் தானாகவே 15 நாட்களுக்குள் போலீசில் சரணடையாவிட்டால் அரபு நாடுகளில் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படுவதாக சொல்லப்படும் "அந்த" மாதிரி தண்டனை ஒன்றை வழங்க போகிறேன்என எச்சரித்துள்ளார்

அதுமட்டுமல்ல, தனக்கு வீடியோ அனுப்பிய 2 பேருக்கும் 15 நாட்களில், தான் கொடுக்க போகும்தண்டனைக்காக வீர தீர செயல்களுக்கான விருதையும் தனக்கு வழங்க வேண்டும் என்று அரிவாளுடன் பேசியுள்ளார் வீரலட்சுமி.

ஏற்கனவே பிறப்புறுப்பை நீக்குவேன் என வீரலட்சுமி  எச்சரித்த  நிலையில் தற்போது அரபு நாட்டு தண்டனை என்று கையில் அரிவாளை  கையில் எடுத்துள்ளார் வீரலெட்சுமி.