இந்தியாவின் மிகப்பெரிய தங்க செயினை வாங்கிய பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் - வைரலாகும் புகைப்படம் - ஷாக்கான மக்கள்

By Nandhini May 27, 2022 07:35 AM GMT
Report

மதுரை மாவட்டம் வரிச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் வரிச்சியூர் செல்வம். ஒருகாலத்தில் இவர் ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து நடத்தி வந்தார். இவர் மீது பல கிரிமினல் வழக்குகள் உள்ளது.

இதனையடுத்து, ஒரு கட்டத்தில் எல்லாம் போதும் என்று ஒதுங்கிய வரிச்சியூர் செல்வம், கோயில் விழாக்களுக்கு செல்வது, உறவினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கு செல்வது என ஒரே குஷி மோடில் பயணம் செய்துக் கொண்டிருக்கிறார்.

நடமாடும் நகைக்கடையாக வலம் வரும் வரிச்சூர் செல்வம், சீசனுக்கு ஏற்ப தன் உடலில் நகையை அதிகரித்துக் கொண்டே இருப்பது இவருடைய வழக்கம். எப்போதும் கழுத்தில் கிலோ கணக்கில் நகைளை அள்ளி அணிந்திருப்பார்.

கொரோனா காலத்தில் 10 பவுன் எடை கொண்ட தங்க முககவசத்தை அணிந்து வந்தது அனைவரின் கவனத்தை திருப்பியது. இவருடைய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகவும் பரவியது.

இந்தியாவின் மிகப்பெரிய தங்க செயினை வாங்கிய பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் - வைரலாகும் புகைப்படம் - ஷாக்கான மக்கள் | Varichur Wealth

இந்நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய தங்க செயினை தற்போது வரிச்சூர் செல்வம் வாங்கியிருக்கிறார். மாடுகள் அணியும் சங்கிலியை விட இவர் வாங்கியுள்ள செயின் அதிக அளவில் கனம் கொண்டதாம்.

நகைக்கடையில் அந்த நகையை ஆர்டர் செய்து வாங்கிய வரிச்சூர் செல்வம், அதை அங்கேயே அணிந்து மகிழ்ந்துள்ளார். இவ்வளவு மிகப் பெரிய செயினை வரிச்சூர் செல்வம் அணிந்தவுடன், நகைக்கடை ஊழியர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். இந்தியாவின் அதிகபட்ச நகையை அணிந்தவர் என்கிற பெருமையை வரிச்சியூர் செல்வம் பெற்றுள்ளார். 

இந்தியாவின் மிகப்பெரிய தங்க செயினை வாங்கிய பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம் - வைரலாகும் புகைப்படம் - ஷாக்கான மக்கள் | Varichur Wealth