வாணியம்பாடியில் கொரோனா தொற்றால் செவிலியர் உயிரிழந்த பரிதாபம்..!
covid
death
nurse
vaniyambadi
By Anupriyamkumaresan
வாணியம்பாடியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, செவிலியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த ரங்கநாயகி, கடந்த 20 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இவர் கடந்த 3 ஆண்டுகளாக நிம்மியம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகுதி சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார். இதில், இவர் கடந்த 5 நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்துள்ளார். இவரது இழப்பு அப்பக்குதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.