இப்போதெல்லாம் நைட்ல கதவ தட்ட யாருமே இல்ல - மனம் உருகி பேசிய வனிதா!

Manjula Vijayakumar Tamil Cinema Vanitha Vijaykumar Tamil Actress
By Vinothini Jul 25, 2023 03:30 PM GMT
Report

 நடிகை வனிதா விஜயகுமார் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

வனிதா

தமிழ் சினிமாவில் பிரபலங்களான மஞ்சுளா - விஜயகுமார் தம்பதியின் மூத்த மகள், வனிதா. இவர் 1990-ம் ஆண்டு தளபதி விஜய்க்கு ஜோடியாக 'சந்திரலேகா' படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படம் தோல்வியை தழுவிய நிலையில், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்கள் மட்டுமே நடித்தார்.

vanitha-shared-her-throwback-memories

பின்னர் தன்னுடன் நாடகத்தில் நடித்த, நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். பிறகு சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு இரண்டு திருமணம் செய்தார் அதுவும் இவருக்கு சரியாக அமையவில்லை. தற்பொழுது தனது 2 குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

ஏங்கும் நடிகை

இந்நிலையில், சமீபத்தில் ஒரு யூட்யூப் சேனலிற்கு இவர் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்து விஷயங்கள் குறித்து பேசினார். அதில் அவர் தனது அம்மா குறித்து மனம் உருக பேசினார், "நைட் 2 மணிக்கு போன் பண்ணுவாங்க, பண்ணிட்டு என்ன பண்றேன்னு கேட்பாங்க, ரெண்டு மணிக்கு என்ன பண்ணுவேன், தூங்குறேன் போனை வைம்மான்னு கத்துவேன்..

vanitha-shared-her-throwback-memories

வீட்ல இருக்கும் போதும் அதே போலத்தான் நைட்டு வந்து கதவை தட்டுவாங்க.. என்ன பண்றேன்னு கேட்பாங்க.. அப்போதெல்லாம் செம கடுப்பா இருக்கும். ஆனால், அம்மா இறந்த பிறகு பல இரவுகளில் தூக்கமில்லாமல் எழுந்து அழுதிருக்கேன்" என்று கூறினார். இது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.