ஐயா தெரியாமல் கருப்பு புடவையில வந்துட்டேன் : தெறித்து ஓடிய வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன் கருப்பு உடையில் சட்டபேர்வைக்கு வருகை தந்தது தற்போது பேசு பொருளாகியுள்ளது.
காங்கிரஸ் போராட்டம்
ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடையில் சட்டப்பேரவைக்கு வந்த நிலையில், வானதி சீனிவாசன் கருப்பு புடவையில் வருகை தந்தார்
கருப்பு உடையில் வானதி சீனிவாசன்
முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டத்தை கண்டித்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்தும் கையில் பதாகைகளுடனும் பேரவைக்கு வந்தனர். மத்திய அரசுக்கு எதிராக நேரம் இல்லா நேரத்தில் தீர்மானமும் கொண்டு வர உள்ள சூழ்நிலையில் தற்போது பேரவை நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளை கலந்து கொள்ள வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு புடவையுடன் பேரவைக்கு வந்ததை தொலைக்காட்சி செய்தியாளர்கள் பதிவு செய்தனர்.
இதனை கண்ட வானதி சீனிவாசன் தெரியாமல் இன்று கருப்பு புடவை அணிந்து வந்து விட்டேன் என புன்னகைத்தபடியே உள்ளே சென்றார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.