யார் மிரட்டினாலும் எங்களிடம் சொல்லுங்கள்....வானதி ஸ்ரீனிவாசன் அதிரடி
கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, புதிய கட்டடங்களைக் கட்டுவதற்காக மக்களிடம் லஞ்சம் கேட்கப்படுவதாக அதிரடியாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு
நேற்று கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கோவை சிவானந்தா காலனி பகுதியில் பொதுமக்கள் சாக்கடை அடைப்புகள் எல்லாம் வருடக்கணக்காக எடுத்து விடாமல் இருக்கிறது என தன்னிடம் குற்றம்சாட்டியதாக குறிப்பிட்டு, குப்பையை தூர் வாருவதற்காக மாநகராட்சி அதிகாரிகளிடம் சொன்னால் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களை மிரட்டுவதாக தெரிவித்தார்.
அதே நேரத்தில், ஒரு வீட்டில் அவர்களுடைய காம்பவுண்டுக்குள் ஒரு போர் போடுவதாக இருந்தால் கூட பணம் வேண்டும் என வசூல் செய்வதாக பகிரங்மாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், வீடு கட்டுகின்றபோது வீட்டின் பணிகள் துவங்கி விட்டால் அதற்கும் தனியாக பணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார்.
எங்களிடம் சொல்லுங்கள்
இந்த பகுதிகளில் பொதுமக்களுடைய நலனுக்காக வீட்டு பராமரிப்பு பணிகள், புதிய கட்டடங்கள், போன்ற பணிகளில் ஈடுபடும் போது யார் வந்து பணம் கேட்டாலும், அதற்காக உதவி செய்திடும் நோக்கத்தில் தனியாக ஒரு ஹெல்ப் லைன் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த உதவி எண் இன்னும் இரண்டு நாட்களுக்குள்ளாக மக்களுக்கு அறிவிக்கப்படும் என்று தகவல் அளித்த வானதி ஸ்ரீனிவாசன், யார் இந்த மாதிரி பணம் கேட்டு மிரட்டினாலும் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களிடம் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.