திருவள்ளுவருக்கு காவி உடை: அமைச்சர் அருண்ராஜ் கண்டனம்

TVK
By Fathima May 31, 2026 05:56 AM GMT
Report

ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் பங்கேற்ற விழா மேடையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்து நெற்றியில் திருநீறு பூசி கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் புகைப்படம் வைத்திருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் அருண்ராஜ், திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர், அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்கு சமம்.

லோக்பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தவறு!

திருவள்ளுவர் எந்தவொரு மதத்திற்கும், சாதிக்கும், இனத்திற்கும், நாட்டிற்கும், தன்னை சுருக்கிக் கொள்ளவில்லை.

திருவள்ளுவருக்கு காவி உடை: அமைச்சர் அருண்ராஜ் கண்டனம் | Valluvar Statue Issue Minister Arunraj Condenms

அவரது திருக்குறள் மனித குலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளை பேசுகிறது.

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட ஆதி பகவான், மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன் என பொதுவான சொற்களை பயன்படுத்தினாரே தவிர எந்தவொரு குறிப்பிட்ட மதக்கடவுளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை.

அவரை தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும் போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாக பார்க்கப்படும் வண்ணத்தை பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்திற்கு முரணானது.

வள்ளுவர் நமக்கு கற்றுக்கொடுத்தது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவத்தை தான், வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க நினைப்பதற்கு சமம்.

அவர் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு பேரொளி. அவருக்கு காவி பூசுவதும் அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல.

அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை வள்ளுவரை களங்கப்படுத்தாதீர்கள்!