பிரபாகரன் பேராண்மை எங்கே ... நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே... வைரமுத்து ட்வீட்

Mahinda Rajapaksa Sri Lanka Economic Crisis Vairamuthu Velupillai Prabhakaran
By Petchi Avudaiappan May 11, 2022 06:31 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இலங்கை
Report

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்குள்ள சூழல் குறித்து கவிஞர் வைரமுத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இல்ங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஆளும் அரசுக்கு எதிராக மக்களை திசை திருப்பியுள்ளது. அங்கு இலங்கை மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது  குடும்ப உறுப்பினர்களோடு திரிகோணமலையில் உள்ள படை முகாமில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

அவர் வெளிநாடுக்கு தப்ப முயற்சித்து வருவதாக கூறப்படும் கவிப்பேரரசு வைரமுத்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் 'தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே... ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே... ஓ சர்வதேச சமூகமே! இப்போதேனும் தமிழன் வீரத்திற்குத் தலைவணங்கு” என தெரிவித்துள்ளார்.