விருதை திருப்பியளிப்பத வைரமுத்தது- ONV விருது அறிவிப்பில் நடந்தது என்ன?

return award vairamuthu onv
By Irumporai May 29, 2021 11:28 AM GMT
Report

சின்மயி தொடங்கி கேரளாவின் முக்கிய நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான வைரமுத்துவுக்கு விருதைத் தருவதற்கு கடுமையான எதிர்ப்புகளை பதிவுசெய்தார்கள்.

இதனால் ஓஎன்வி அமைப்பு வைரமுத்துவுக்கான விருது அறிவிப்பை மறுசீலனை செய்யப்போகிறோம் என அறிவித்தது . கேரளாவின் புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியரும், இடதுசாரி சிந்தனையாளருமான ஓஎன்வி அமைப்பு அவர்களின் பெயரில் அமைப்பு தொடங்கப்பட்டு அந்த அமைப்பு வருடம் தோறும் இலக்கிய விருது வழங்கி வருகிறது.

இதுவரை மலையாளிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த இந்த விருதை முதன்முறையாக ஓஎன்வி அமைப்பு கவிஞர் வைரமுத்துவுக்கு இந்த ஆண்டு வழங்குவதாக அறிவித்தது.

மே 26-ம் தேதி இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் இது பெரும் சர்ச்சையானது.

கேரளாவை பூர்விகமாக கொண்டவரும், தமிழில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகையுமான பார்வதி, பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி., விருது வழங்கபட உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து தனது டுவிட்டர் பதிவில்,ஓ.என்.வி., ஐயா எங்கள் பெருமைக்குரியவர்.

அவருடைய பங்களிப்பு யாருடனும் ஒப்பிட முடியாதது. பாலியல் வன்கொடுமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அவரது பெயரில் விருது வழங்கப்படுவது மிகுந்த அவமரியாதைக்குரியது' என குறிப்பிட்டார்.

அதே போல் வைரமுத்து மீது பாலியல் குற்றம் சாட்டிய பாடகி சின்மயி, உள்ளிட்ட பல பெண்களும் வைரமுத்துவிற்கு விருது வழங்கப்படுவதை எதிர்த்து டுவிட்டரில் பதிவிட்டு வந்தனர். இதனால் நேற்று ஓஎன்வி அமைப்பு வைரமுத்துவுக்கான விருது அறிவிப்பை மறுசீலனை செய்யப்போகிறோம் என அறிவித்தது.

இந்த நிலையில், ஓஎன்வி விருதினை திருப்பியளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: ,

கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது அதனை நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.

[

ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன்.

இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாக கருதுகிறேன். ஆகவே பல சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன்.


நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.

ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன்.

எனக்கு விருதுடன் வழங்கப்படுவதாக அறிவித்த பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தை கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.

மேலும்,மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்.

தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும். இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

விருது அறிவிப்பை போலவே, விருதை வாங்காமலேயே வைரமுத்து விருதை திருப்பி கொடுப்பதாக கூறுவதையும் 3 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் கேட்டிருப்பது விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. தற்போது இந்த விவகாரம் இணையத்தில் பெரும் பேசு பொருளாக உள்ளது.