மரியாதைக்கு கூட கேட்கல.. நாகரிகமே இல்லையா? பிரபல இயக்குநரை தாக்கிய வைரமுத்து?

Tamil Cinema Vairamuthu
By Sumathi Jun 09, 2025 10:30 AM GMT
Report

தனது பாடல் வரிகளை, படத் தலைப்புகளாக பயன்படுத்தி வருவதாக வைரமுத்து ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா

கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "என்னுடைய பல்லவிகள் பலவற்றைத் தமிழ்த் திரையுலகம் படத் தலைப்புகளாகப் பயன்படுத்தி இருக்கிறது.

vairamuthu

அப்படி எடுத்தாண்டவர்கள் யாரும் என்னிடம் அனுமதி பெறவில்லை என்பதோடு மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தையும் கேட்டதில்லை. ஒன்றா இரண்டா... பொன்மாலைப் பொழுது, கண் சிவந்தால் மண் சிவக்கும், இளைய நிலா, ஊரத் தெரிஞ்சுகிட்டேன், பனிவிழும் மலர்வனம், வெள்ளைப் புறா ஒன்று, பூவே பூச்சூட வா,

”தமிழ்நாடு வாழ்க”.. 5 மொழிகளில் போட்ட போஸ்ட் - கமல்ஹாசன் திட்டவட்டம்

”தமிழ்நாடு வாழ்க”.. 5 மொழிகளில் போட்ட போஸ்ட் - கமல்ஹாசன் திட்டவட்டம்

வைரமுத்து ஆதங்கம்

ஈரமான ரோஜாவே, நிலாவத்தான் கையில புடிச்சேன், மெளன ராகம், மின்சாரக் கண்ணா, கண்ணாளனே, என்னவளே, உயிரே, சண்டக்கோழி, பூவெல்லாம் கேட்டுப் பார், தென்மேற்குப் பருவக்காற்று, விண்ணைத் தாண்டி வருவாயா, நீ தானே என் பொன் வசந்தம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், தங்கமகன் இப்படி இன்னும் பல...

சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக இவர்கள் யாரையும் நான் கடிந்து கொண்டதில்லை காணும் இடங்களில் கேட்டதுமில்லை. செல்வம் பொதுவுடைமை ஆகாத சமூகத்தில் அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே என்று அகமகிழ்வேன். ஏன் என்னைக் கேட்காமல் செய்தீர்கள் என்று கேட்பது எனக்கு நாகரிகம் ஆகாது.

ஆனால் என்னை ஒருவார்த்தைக் கேட்டுவிட்டுச் செய்வது அவர்களின் நாகரிகம் ஆகாதா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார். இந்தப் பதிவு தற்போது கவனம் பெற்றுள்ளது. இவரது பதிவில் மணிரத்னம் இயக்கிய மௌன ராகம், உயிரே படங்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.