முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவிக்கு வந்த நாளில் இருந்து இதுவரை ஓய்வெடுக்கவில்லை - வைகோ..!
முதலமைச்சர் அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு நலம் பெற வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ட்வீட் செய்துள்ளார்.
முதலமைச்சருக்கு கொரோனா தொற்று
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைய வேண்டும் என வைகோ ட்வீட் செய்துள்ளார்.
வைகோ அறிக்கை
அந்த ட்வீட்டர் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர் அன்புச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் முழு நலம் பெற வேண்டும்.
அவர் முதலமைச்சர் பதவி ஏற்றதிலிருந்து ஒரு நாள் கூட ஓய்வு எடுக்கவில்லை. சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும். வாரத்தில் ஒரு நாளாவது அவர் ஓய்வு எடுக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
தமிழ்நாட்டு நன்மைக்காக, இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அவர் முழு உடல் நலனோடு பணியாற்றுவது காலத்தின் தேவையாகும்.
அவர் விரைவில் முழு நலம் பெற்று தமிழகத்திற்கு பணியாற்ற இயற்கையை வேண்டுகிறேன்.’ என அவர் தெரிவித்துள்ளார்.