வாய்க்கு வந்தபடி நடிகர் ரஜினிகாந்தை திட்டிய வடிவுக்கரசி - வழிமறித்த ரசிகர்கள்
நடிகர் ரஜினியை, குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி வாய்க்கு வந்தபடி திட்டியது குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ரஜினியை மிரட்டிய வடிவுக்கரசி
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்று வரை கொடி கட்டி பறப்பவர் ரஜினிகாந்த். தற்போது வரை இவருக்கான, இடம் இந்திய சினிமாவில் குறையவில்லை.
தற்போதும், இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அருணாச்சலம்.
இந்தப் படத்தில் யாரும் இல்லாத ஏழையாக இருந்து, தன் தந்தையின் சம்பாத்தியத்தால் பணக்காரனாக மாறுவார். இந்த படத்தில் வேத வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடிகை வடிவுக்கரசி மிரட்டி இருப்பார்.
மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்கள்
முதல் பாதியில், வடிவுக்கரசி வீட்டில் தங்கி இருக்கும் ரஜினியை அவர் கேவலமாக வசை பாடுவார். அதாவது, அனாதை, ஊர் பெயர் தெரியாதவன் என வாய்க்கு வந்தபடி திட்டி இருப்பார்.
தற்போது, இந்த காட்சி குறித்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை வடிவுக்கரசி பகிர்ந்துள்ளார். அதாவது தான் ஒரு ஊருக்கு சென்று விட்டு திரும்பும் போது, ரஜினி ரசிகர்கள் தான் சென்ற ரயிலை வழிமறித்து, தன்னை சிறை பிடித்தனர்.
எவ்வளவு தைரியம் இருந்தா? எங்க தலைவர திட்டுவ? என தன்னை அடிக்க பாய்ந்தனர். மன்னிப்பு கேட்டால் தான் விடுவோம் என எச்சரித்தனர்.
தான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல், கடைசியாக மன்னிப்பு கேட்ட பிறகுதான் என்னை அனுப்பி வைத்தனர். இந்த காட்சிகளை இன்னும் என்னால் மறக்க முடியாது என வடிவுக்கரசி சிரித்துக் கொண்டே தெரிவித்துள்ளார்.

IQ test: இங்கு ஏழைக் குடும்பம் எது? 5 வினாடிகளில் உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan
