யாருக்கும் தொந்தரவு இல்லாம அம்மா போயிட்டாங்க - தாய் மறைவு குறித்து கண் கலங்கிய வடிவேலு

Madurai Vadivelu Death
By Thahir Jan 19, 2023 07:25 AM GMT
Report

யாருக்கும் தொல்லை பண்ணாம்ம அந்த அம்மா போயிட்டாங்க - தயார் மறைவு குறித்து கண் கலங்கிய வடிவேலு யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அந்த அம்மா போயிட்டாங்க என தனது தயார் மறைவு குறித்து வடிவேலு கண் கலங்க தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் எண்ட்ரீ 

தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் 1988 ஆம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான “என் தங்கை கல்யாணி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

பின்னர் சின்ன கவுண்டர், என் ராசாவின் மனசிலே, அரண்மனை கிளி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். இவர் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தது அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிலையில் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் மூலம் நடிகர் வடிவேலு தற்போது ரீஎண்டரி கொடுத்துள்ளார்.

தாயார் காலமானார் 

சென்னையில் படப்பிடிப்பில் பங்கேற்றாலும், தன் சொந்த ஊரான மதுரையில் குடும்பத்தினருடன் நடிகர் வடிவேலு வசித்து வந்தார்.

மதுரை விரகனுாரில் உள்ள வீட்டில் வடிவேலுவின் தாயார் சரோஜினி என்ற பாப்பா வயது முதிர்வால் உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவர் காலமானார்.

vadivelu-is-distraught-over-her-mother-s-death

அவரின் உடலுக்கு உறவினர்கள் வடிவேலுவின் நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தொலைபேசியில் வடிவேலுவை தொடர்பு கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் மறைவுக்கு இரங்கலை தெரிவித்தார்.

கண் கலங்கிய நடிகர் வடிவேலு

பின்னர் வடிவேலு தன் தாயார் மறைவு குறித்து பேசிய வீடியோவில் தன் தாயார் நன்றாக இருந்ததாகவும் உடல்நிலை குன்றிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

vadivelu-is-distraught-over-her-mother-s-death

மேலும், பொங்கல் கொண்டாடுவதற்கு மதுரை வந்ததாக தெரிவித்த வடிவேலு தன் தாய் பொங்கல் கொண்டாடும் வரை தனது தாய் யாரையும் தொந்தரவு செய்யவில்லை.

எல்லா நிகழ்ச்சியையும் முடித்துவிட்டு யாருக்கும் தொந்தரவு கொடுக்காமல் போயிட்டாங்க என கண் கலங்கிய படி பேசினார்.