முதலிரவு காட்சி எடுக்கும்போது பயங்கர சண்டையே வெடிக்கும்... - திடுக்கிடும் தகவல் சொன்ன சரண்யா...!

Saranya V. J. Chitra
By Nandhini Dec 11, 2022 11:37 AM GMT
Report

முதலிரவு காட்சி எடுக்கும்போது அவர்களுக்குள் பயங்கர சண்டையே வெடிக்கும் என்று வி.ஜே.சித்ரா இறந்து 2 வருடங்களுக்கு பிறகு தோழி சரண்யா பல திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.

நடிகை சித்ரா மரணம்

சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில், இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.

ஜாமீனில் வெளி வந்த ஹேம்நாத் 60 நாட்கள் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியது பெரும் சலசலப்பை கிளப்பினார்.

இதனையடுத்து, ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி, சித்ராவின் நண்பர் சையத் ஹோகித் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் ஜாமீனை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இன்றும் இவருடைய தற்கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

v-j-chitra-hemnath-saranya

மனம் திறந்த தோழி சரண்யா -

இந்நிலையில் வி.ஜே.சித்ராவின் இறப்பு குறித்து நடிகையும், தோழியும் ஆன சரண்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் சில விஷயங்களை தெரிவித்தார்.

இது குறித்து சரண்யா பேசுகையில்,

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ரா நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு சில பிரச்சனைகள் இருந்தது. எந்த நேரத்தில் நான் லவ் பண்ண தொடங்கினேனோ அப்போதுதான் இந்த சீரியலில் லவ் காட்சிகள், நெருக்கமாக காட்சிகள் எடுக்குறார்கள் என்று சித்ரா என்னிடம் கூறினார். சீரியலில் நெருக்கமான காட்சிகள் குறித்து சித்ராவின் அம்மாவும் என்னிடம் பலமுறை பேசியுள்ளார்.

இதனால், மனமுடைந்த சித்ரா என்னிடம்.. என்னால் சமாளிக்க முடியவில்லை சரண்யா... என் கணவர் என் மீது கோபப்படுகிறார். அவர் என்னை புரிந்து கொள்ளவே இல்லை. அவர் என்னை புரிந்து கொள்ள வேண்டும்.

இல்லையென்றால் நான் சீரியலில் லவ் காட்சிகள் பண்ண மாட்டேன் என்று சொல்ல வேண்டும் என்று வருத்தப்பட்டு கூறினார். பல விஷயங்களை தன் மனதில் மறைத்து என்னிடம் சித்ரா பேசும்போது சிரித்துக்கொண்டு, சில சமயங்களில் பயந்து மறைத்து பேசுவார்.

சித்ராவுக்கு நான் எப்போதும் ஆறுதல் சொல்வேன். ஆடியோ காலையும் என்னிடம் போட்டு காண்பித்து அழுது புலம்பினாள். சீரியலில் முதலிரவு காட்சிகள் எல்லாம் எடுக்கும் போது சித்ராவுக்கும், அவருடைய கணவருக்கும் பயங்கர சண்டையே வெடிக்கும் என்று திடுக்கிடும் தகவலை கூறினார்.