வி.ஜே.சித்ரா வழக்கில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளது - மாடல் அழகி பகீர் குற்றச்சாட்டு..!
சீரியல் நடிகை சித்ரா வழக்கில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படத்தில் நடித்த திருநங்கை வைஷு லிசா வள்ளல் தெரிவித்துள்ளார்.
சீரியல் நடிகையான சித்ரா மறைந்த கடந்த ஓராண்டு கடந்துவிட்டது. இவர் தனது காதல் கணவருடன் தனியார் ஹோட்டல் அறையில் இருந்த போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள ஹேம்நாத் தனக்கும் சித்ரா மரணத்திற்கும் தொடர்பில்லை என்றார். இதற்கு காரணம் ஒரு மாஃபியா கும்பல் தான் என்று பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதனிடையே வி.ஜே சித்ரா தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.அவரின் மரணம் குறித்து நாள் தோறும் பலர் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகின்றனர்.
சித்ரா வழக்கு குறித்து மாடல் அழகியும்,மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் நடித்த திருநங்கையுமான வைஷு லிசா வள்ளல் பேசுகையில்,
தானும் வி.ஜே சித்ராவும் மக்கள் தொலைக்காட்சியில் பணிபுரிந்ததாக தெரிவித்தார். வி.ஜே சித்ரா இறந்து ஓராண்டு ஆன நிலையில் நிறைய பேர் இப்போ உண்மைகளை சொல்வதாக சொல்கிறார்கள்,
அந்த உண்மைகளை ஒரு வாரத்தில் சொல்லியிருக்கலாம் அல்லது இரண்டு வாரங்கள் கழித்து சொல்லியிருக்கலாம் ஏன் இரண்டு வருடம் கழித்து சொல்கிறார்கள் என்று எனக்கு ஒன்னுமே புரியல என்றார்.
வி ஜே சித்ரா தனக்கு ஒரு சூட் மூலமாக தான் பழக்கம்.ஒருவர் உயிரோடு இருக்கும் போது அத பேசுறதுக்கு தகுதியில்லாதவுங்க ஒரு சிலர்.
ஒருத்தர் இறந்த பின் நான் அது பண்ணியிருக்கேன்,நான் இது செஞ்சியிருக்கேன் என்று பேசும் அவர்கள் தகுதியானவர்களா என்று யோசிக்க வேண்டும் கண்ணாடி முன் போயிட்ட அவுங்க தகுதியானவுங்களானு பார்க்க வேண்டும்.
தான் யூடியூப் சேனல் ஒன்றில் ஹேமந்த் நண்பர் ஒருவர் காண்டம் எடுத்து காட்டுகிறார்.சித்ரா யூஸ் பண்ண திங்ஸ் எல்லாம் எடுத்து காட்டுகிறார்.
இது குறித்து ஹேமந்த் இது மாதிரியான பொருட்கள் எல்லாம் அவருகிட்ட கொடுத்திருந்ததாகவும் ஆனா நான் வந்து பார்க்கும் போது இது மாதிரி எக்ஸ் போஸ் பண்ணி வச்சிருப்பதாக புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.
இந்த வழக்கை குட்டைய குழப்புவதாகவும்,தேவையில்லாமல் செய்வதாக குறிப்பிட்டார். ஹேமந்த் எப்படி சித்ராவை கொலை செய்து இருப்பார்.
அப்படி சாவடிக்கிறதா இருந்தா வீட்டிலே சாகடித்து இருக்கலாம் என தான் நினைப்பதாக பேசிய அவர், சித்ராவை பற்றி பேசும் நபர்கள் ஒரு வருடத்திற்கு முன் எங்கே போனார்கள்? சித்ரா செத்து இரண்டு வருஷம் ஆக போகுது இப்ப எதுக்கு வந்து பேசுறாங்கனு கேட்கிறேன்.
ஹேமந்த தப்பு செய்தரா என்பதை பார்க்க சட்டம்,சிபிஐ,அரசு இருக்கு,எனக்கு வி ஜே சித்ரா ரொம்ப பிடிக்கும். நிறைய பேர் பாப்புலாரிட்டி தேடுவதற்காக இந்த விஷயத்தை பற்றி பேசுகிறார்கள்.
சித்ரா மரணத்தில் நிறைய அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று நினைப்பதாக தெரிவித்தார். ஹேமந்த் உண்மையான கொலையாளிய இருந்து இருந்தா சட்டம் தண்டிக்கும். சித்ரா நிறைய தனிப்பட்ட விஷயத்தை ஹேமந்த் கிட்ட சொல்லியிருக்கலாம் அத அவுங்களா சொன்னாதான் தெரியும்.