சித்ராவை அடுத்தவர்களுக்கு என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான் ஹேம்நாத்... - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரேகா நாயர்

V. J. Chitra
By Nandhini May 23, 2022 12:02 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் சில தினங்களுக்கு முன் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். அதன்படி சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார்.

சமீபத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 'என் மனைவியின் தற்கொலையின் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனர். இவர்களிடம் ஒரு கும்பல் பணம் பறிக்க முயற்சி செய்கிறது. அதற்கு நான் உடன்படாததால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் என்று ஹேம்நாத் தெரிவித்திருந்தார்.

மேலும், அன்று ஓட்டலில் நான் பேசிய எதையுமே சித்ரா காதில் வாங்கவில்லை என்றும், அவரை தொட்டபோது கூட பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சித்ராவை தொந்தரவு செய்ய வேண்டாம் என தான் வெளியே அமர்ந்துவிட்டேன்.

சித்ரா உள்ளே சென்றதால் குளிக்கப்போகிறார் என்று நினைத்த நிலையில் 5 நிமிடம் கழித்து உள்ளே சென்றபோது கதவு பூட்டியிருந்தது என்றும் சித்ராவின் முனகல் சத்தம் மட்டும் கேட்டது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகை சித்ரா இறந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டநிலையில், தற்போது, அவரை பற்றி பல திடுக்கிடும் தகவல்களை சித்ரா தோழி நடிகை ரேகா நாயர் தெரிவித்து வருகிறார்.

இது குறித்து சித்ரா பற்றி ரேகா தற்போது பேசுகையில் -

சித்ராவை பல இடங்களுக்கு கூட்டிக்கொண்டு சென்று உல்லாசமாக இருந்து வந்தான் ஹேமந்த். சித்ராவும் அதை என்ஜாய் பண்ணிட்டுதான் இருந்தாள்.

சித்ராவை கொஞ்சம், கொஞ்சமாக தன் உல்லாசத்துக்காக பயன்படுத்தினான் ஹேமந்த்.பின்னர், அடுத்தவர்களும் என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான்.

சித்ரா மற்றவர்களுடன் நெருங்கிப் பழகியதை பார்த்து ஹேமந்துக்கு பொறாமை ஏற்பட்டது.

சித்ராவின் மரணத்திற்கு சித்ராவே தான். அவளுடைய பேராசை தான் காரணம்.

சித்ராவை உல்லாசத்திற்காக பயன்படுத்தியவர்கள் கூட சித்ராவின் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம். அது யார் என்று எனக்கு தெரிந்தாலும் அதை நான் சொல்லவே மாட்டேன் என்று கூறியுள்ளார். 

சித்ராவை அடுத்தவர்களுக்கு என்ஜாய் பண்ண அனுப்பி வைத்தான் ஹேம்நாத்... - திடுக்கிடும் தகவலை வெளியிட்ட ரேகா நாயர் | V J Chitra