வீட்டு கடன் கட்ட எங்கிட்ட பணம் இல்லைப்பா... காரை எடுத்து போய்ட்டாங்க... - சித்ரா தாய் கதறல்

V. J. Chitra
By Nandhini May 13, 2022 10:59 AM GMT
Report

சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் சில தினங்களுக்கு முன் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். அதன்படி சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். மேலும், அந்த தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் எனவும் ஹேம்நாத் தெரிவித்திருந்தார்.

மேலும், அன்று ஓட்டலில் நான் பேசிய எதையுமே சித்ரா காதில் வாங்கவில்லை என்றும், அவரை தொட்டபோது கூட பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சித்ராவை தொந்தரவு செய்ய வேண்டாம் என தான் வெளியே அமர்ந்துவிட்டேன். சித்ரா உள்ளே சென்றதால் குளிக்கப்போகிறார் என்று நினைத்த நிலையில் 5 நிமிடம் கழித்து உள்ளே சென்றபோது கதவு பூட்டியிருந்தது என்றும் சித்ராவின் முனகல் சத்தம் மட்டும் கேட்டது என்றும் கூறியுள்ளார்.

சித்ரா இறந்து ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் தற்போது சித்ரா தற்கொலை விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதுகுறித்து சித்ராவின் தோழி ரேகா நாயர் செய்தியாளர்களிடம் பல திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். சித்ரா நல்லவர் இல்லை, தண்ணி அடிப்பார், கஞ்சா அடிப்பார், பலரை காதலித்தார், வீட்டில் பாக்கெட் நிறைய ஆணுறை இருந்தது, பல பேருடன் அவருக்கு தவறான தொடர்பு இருந்தது என்று கூறியிருந்தார். ஹேமந்தும் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளதாக கூறியுள்ளார்.

இறந்த ஒருவருக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கும் வேலையை ரேகா நாயர் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆவேசமாக சமூகவலைத்தளங்களில் சித்ராவின் ரசிகர்கள் அவரை தாக்கி பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சித்ராவின் பெற்றோர் கதறி அழுதுள்ளனர்.

இது குறித்து சித்ராவின் தாய் பேசுகையில் -

என் மகள் குறித்து வெளியாகும் தவறான தகவல்களால் மேலும், மேலும் நாங்கள் உடைந்து போகிறோம். ஏன் இப்படி பண்றீங்க? என் மகள் அப்படிப்பட்டவள் கிடையாது. என் மகள் பற்றி எங்களுக்கு தெரியும்.

வீடு, கார் எல்லாமே லோனில்தான் சித்ரா வாங்கினா... என் பொண்ணு இல்லாததால் எங்களால் வீட்டுக்கான கடன் தொகையை கட்ட முடியவில்லை. காருக்கும் பணத்தை கட்ட முடியவில்லை. அதனால் காரை எடுத்து போயிட்டாங்க. வீட்டிற்காக வங்கியில் அவகாசம் கேட்டிருக்கிறேம்.

சமூகவலைத்தளங்களில் சித்ராவை பத்தி தப்பா பேச வைக்கிறாங்க. அவன காப்பாத்த ஏன் பொண்ண பத்தி தப்பா பேசுறாங்களா? ஒரேடியா என் பொண்ண புதைச்சுட்டான். 28 வருஷமா அவள கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்று கண்ணீர் மல்க கதறி அழுதுகிறார் சித்ராவின் தாய்.   

வீட்டு கடன் கட்ட எங்கிட்ட பணம் இல்லைப்பா... காரை எடுத்து போய்ட்டாங்க... - சித்ரா தாய் கதறல் | V J Chitra