ஒன்றாக சேர்ந்து குளிக்கும் அளவிற்கு அந்த நபருடன் சித்ராவுக்கு பழக்கம் இருந்தது - பகீர் கிளப்பிய ரேகா நாயர்

V. J. Chitra
By Nandhini May 08, 2022 12:40 PM GMT
Report

சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் சில தினங்களுக்கு முன் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார்.

அதன்படி சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும், அந்த தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அரசியல் தலைவர் யார் என்பது பற்றிய விவரம் வெளியாகும் எனவும் ஹேம்நாத் தெரிவித்திருந்தார்.

அன்று ஓட்டலில் நான் பேசிய எதையுமே சித்ரா காதில் வாங்கவில்லை என்றும், அவரை தொட்டபோது கூட பெரிதாக ரியாக்ட் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சித்ராவை தொந்தரவு செய்ய வேண்டாம் என தான் வெளியே அமர்ந்துவிட்டேன். சித்ரா உள்ளே சென்றதால் குளிக்கப்போகிறார் என்று நினைத்த நிலையில் 5 நிமிடம் கழித்து உள்ளே சென்றபோது கதவு பூட்டியிருந்தது என்றும் சித்ராவின் முனகல் சத்தம் மட்டும் கேட்டது என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து சித்ராவின் தோழி ரேகா நாயர் கூறியதாவது -

சித்ரா மீடியா துறையில் பலருடன் தொடர்பு கொண்டு பல ஆண் நண்பர்கலுடன் டேட்டிங் சென்றிருக்கிறார். சித்ராவுக்கு ஹேமந்த் 4வது காதலன் என்பதை அவரது மாமனாரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

சித்ராவின் இறப்புக்கு ஹேம்நாத் மட்டும் காரணமாக இருக்க மாட்டார். மேலும், இருவருக்கு சித்ராவின் மரணத்தில் தொடர்பிருக்கிறது. சித்ராவும் ஹேமந்தும் ஒரே அறையில் தங்கியிருந்தார்கள்.

இருவரும் காதலர்கள், அவர்கள் தங்கியிருந்த வீட்டில் காண்டம்கள் இருந்தன. இதை நானே பார்த்துள்ளேன். மேலும் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வருகிறது.

அப்படியிருக்கும் போது சித்ரா குளிக்க போகும் போது எதற்காக ஹேமந்தை வெளியே போக சொல்ல வேண்டும். இருவரும் சேர்ந்து குளிக்கும் அளவுக்கு நெருக்கம்தானே. எனவே ஹேமந்த் சொல்வதில் நிறைய பொய் உள்ளது. மாஜிக்களை விசாரித்தால் உண்மை வெளியே வந்து விடும் என்று ரேகா நாயர் கூறியுள்ளார்.  

ஒன்றாக சேர்ந்து குளிக்கும் அளவிற்கு அந்த நபருடன் சித்ராவுக்கு பழக்கம் இருந்தது - பகீர் கிளப்பிய ரேகா நாயர் | V J Chitra