அசைவம் சமைத்து தர கேட்ட கணவர் - அடித்தே கொன்ற மனைவி

Uttar Pradesh
By Karthikraja Aug 11, 2024 10:58 AM GMT
Report

அசைவம் சமைத்து தர கேட்டதற்காக கணவரை செங்கல்லால் அடித்து, மனைவி மூளையை வெளியே எடுத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அசைவ உணவு

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் சத்பால்(40), காயத்ரி தேவி (39) என்ற தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு கல்லூரி செல்லும் வயதில் 2 மகன்கள் உள்ளனர். 

அசைவம் சமைத்து தர கேட்ட கணவர் - அடித்தே கொன்ற மனைவி | Uttarpradesh Wife Killed Husband Ask Cook Mutton

சத்பால் அசைவ உணவு உண்பவர் ஆனால் காயத்ரி சைவ உணவை உண்பவர். இதனால் சத்யபாலுக்கும் காயத்ரிக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தாக்குதல்

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று சத்யபால், காயத்ரியிடம் அசைவ உணவை சமைத்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு காயத்ரி மறுப்பு தெரிவிக்கவே, சத்பாலுக்கும் காயத்ரிக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.

ஆத்திரத்தில், காயத்ரி செங்கலை எடுத்து சத்பாலின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். ஒரு சமயத்தில் சத்பாலின் மண்டை உடைந்துள்ளது. ஆனால், அப்போதும் அவர் நிறுத்தவில்லை. தலையில் இருந்து மூளையை வெளியே எடுத்துள்ளார். வீட்டு வாசலில் நடந்த இந்த சம்பவத்தை பலரும் வீடியோ எடுத்த நிலையில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. சம்பவ இடத்திலேயே சத்பால் துடிதுடித்து உயிரிழந்தார். 

விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சத்பாலின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயத்ரியிடன் நடத்திய விசாரணையில், அசைவம் செய்து கொடுக்க பணம் இல்லாததால் மறுத்தேன். இதனாலேயே, என் கணவர் என்னை அடிக்கடி அடிப்பார். இதனால், ஆத்திரத்தில் இதை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

காயத்ரி மனநோய்க்கான சிகிச்சை பெற்று வருகிறார். இன்னும் அவரின் மனநிலை சரியாகவில்லை என காயத்ரியின் தாயார் தெரிவித்துள்ளார். காயத்ரிக்கு இன்னும் மனநிலை சரியாகாமல் இருக்கலாம் எனவும், அவரின் சிகிச்சை தொடர்கிறது என்பது உறுதியாகியுள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.