என் காதல் என்ன கத்திரிக்கா தொக்கா? - ஏமாற்றிய காதலியை மணமேடையில் திருமணம் செய்ய முயன்ற காதலன்
காதலித்த பெண்ணால் கைவிடப்பட்ட காதலன் அந்த பெண்ணின் திருமணம் நடைபெரும் இடத்திற்கே சென்று திரைப்பட பாணியில் நெற்றியில் குங்குமம் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம், கோரக்பூரில் கடந்த 1-ந் தேதியன்று காதலிக்கு திருமணம் நடக்கவிருக்கும் செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்றுள்ளார் காதலன்.
அங்கு மணமேடையில் உறவினர்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்த மணமக்கள் மாலை மாற்றும் சமயத்தில் திரைப்படங்களில் ஹீரோ என்ட்ரி கொடுப்பதைபோல முகத்தில் ஸ்கார்ஃப் அணிந்தபடி மேடையில் என்ட்ரி கொடுத்தார் பெண்ணின் முன்னாள் காதலன்.
மேடையில் மணக்கோலத்தில் இருந்த காதலியின் நெற்றியில், மணமகன் கண் முன்னே வலுக்கட்டாயமாக குங்குமத்தை பூசி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருகிறார் அவர்.
சில மாதங்களுக்கு முன்பு வெளியூருக்கு வேலைக்காக சென்றிருந்த சமயத்தில் காதலிக்கு திருமண ஏற்பாடு செய்யபட்டதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் அவர்.
இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த மணமக்களின் உறவினர்கள் காவல் துறையினற்கு தகவல் தெறிவித்ததை அடுத்து அங்கு வந்த போலிசார் காதலனை வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.
இதனையடுத்து மணமக்களுக்கு அடுத்த நாள் காலையில் ஏற்பாடு செய்யப்பட்டது போலவே திருமணம் நடைப்பெற்றிருக்கிறது.
இளைஞனின் இந்த அடாவடியான செயலை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்ததையடுத்து அது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது.