பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை - ஓராண்டாக நடந்த கொடூரம்

Uttar Pradesh
By Karthikraja Aug 18, 2024 06:50 AM GMT
Report

மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் வன்கொடுமை

உத்திரபிரதேசத்தில் பெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை (16.08.2024) காவல் நிலையத்திற்கு ஒரு புகார் வந்துள்ளது.  

daughter

அந்த புகாரில், தனது 17 வயது மகளை கடந்த ஓராண்டாக தனது கணவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இந்த விஷயம் எனக்கு தெரிந்து அதை பற்றி கணவரிடம் கேட்டு எதிர்ப்பு தெரிவித்த போது, முத்தலாக் தெரிவித்து தப்பியோடி விட்டார் என கூறியுள்ளார். 

6 வயது சிறுமியையும் ஆட்டையும் வன்கொடுமை செய்த முதியவர் - வீடியோ எடுத்த சிறுவன்

6 வயது சிறுமியையும் ஆட்டையும் வன்கொடுமை செய்த முதியவர் - வீடியோ எடுத்த சிறுவன்

கைது

இந்த புகார் குறித்து காவல் துறை அதிகாரி அன்ஜனி குமார் சதுர்வேதி கூறுகையில், வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தந்தையை கைது செய்துள்ளோம். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.

arrest

பெற்ற தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் உத்திரபிரதேசத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.