உத்தரகாண்டிற்கு ரெட் அலர்ட் - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Uttarakhand
Red Alert
heavy rain fall
By Anupriyamkumaresan
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் தொடர் கனமழை காரணமாக அனைத்து பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு 5 நாட்களுக்கு விடுமுறை அளித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்தரகாண்டில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முதல் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.