பெற்ற மகனையே திருமணம் செய்துகொண்ட தாய்..கணவர் போலீசில் புகார் - அதிர்ச்சி சம்பவம்
பெற்ற மகனையே தாய் ஒருவர் திருமணம் செய்துகொண்ட சம்பவம் மக்களிடையே குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், பாஸ்பூரை சேர்ந்த இந்திரராம் காவல் நிலையத்தில் விநோதமான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் தனது மனைவி பாப்லிக்கு ஏற்கனவே முதல் திருமணம் நடைபெற்று இரண்டு மகன்கள் உள்ளதாகவும், தன்னை இரண்டாவதாக திருமணம் செய்த பிறகு மகன்களை முதல் கணவரிடம் விட்டுவிட்டு தன்னுடன் வசித்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்திரராமு பாப்லி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த மகன் ஒருவன் அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்ல ஆரம்பித்ததாகவும், தற்போது தனது மனைவி அவரின் மகனையே திருமணம் செய்து கொண்டதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டில் இருந்த ரூ. 20 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பெற்ற மகனை தாயே திருமணம் செய்துக்கொண்டது அப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.