‘’இந்த வெள்ளத்திற்கு காரணம் சிவனின் கோபம்’’ - சுப்பிரமணிய சுவாமி ட்வீட்
உத்தராகண்ட் வெள்ளப் பாதிப்புக்கு காரணம் கடவுள் சிவனின் கோபம் என்று சுப்பிரமணிய சுவாமி பதிவிட்டுள்ளார்.
உத்தரகாண்டில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதில். அந்த மாநிலத்தின் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
உத்ரகாண்டில் 10 தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை உத்தரகாண்டில் பெய்த மழையால் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், உத்தராகண்ட் வெள்ளப் பாதிப்புக்கு காரணம் கடவுள் சிவனின் கோபம் என்று பதிவிட்டுள்ளார்.
Uttarakhand is under flood. Lord Shiva angry ?
— Subramanian Swamy (@Swamy39) October 19, 2021