ஓடும் ரயிலில் பெண்னுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - டிக்கெட் பரிசோதகர் கொடுமை

Sexual harassment Uttar Pradesh Crime
By Sumathi Jan 23, 2023 05:09 AM GMT
Report

ரயிலில் டிக்கெட் பரிசோதகர் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

 கூட்டு பாலியல் வன்கொடுமை

உத்தரப் பிரதேசம் சம்பல் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது மதிக்கத்தக்க பெண். இவர் தனது 2 வயது மகனுடன் டேராடூன்-பிரயாக்ராஜ் லிங்க் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார். பொதுப் பெட்டியில் பயணம் செய்துவந்த நிலையில், இந்த பெண்ணுக்கு தெரிந்த டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங் அந்த ரயிலில் பணியில் இருந்துள்ளார்.

ஓடும் ரயிலில் பெண்னுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - டிக்கெட் பரிசோதகர் கொடுமை | Uttar Pradesh Woman Raped By Tte

குழந்தையுடன் பொதுப்பெட்டியில் பயணம் செய்வது கஷ்டம் என்று கூறி அவர் பெண்ணுக்கு ஏசி முதல் வகுப்பு பெட்டியில் இருக்கைக்கு ஏற்பாடு செய்து தந்துள்ளார். தொடர்ந்து, இரவு 10 மணி அளவில் ராஜூ சிங் குடிநீர் பாட்டிலை கொடுத்துள்ளார்.

மயக்க மருந்து

அதில் மயக்க மருந்து கலக்கப்பட்டிருந்த நிலையில், அதை குடித்த பெண் மயக்க நிலைக்கு சென்றார். அதன் பின்னர் ராஜூ சிங் மற்றொரு நபருடன் சேர்ந்து பெண்ணை ரயில் பெட்டியில் வைத்தே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில்,  டிக்கெட் பரிசோதகர் ராஜூ சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.