முக்தி நிலையை அடைய இளைஞருக்கு உயிருடன் சமாதி கட்டிய சாமியார்கள்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
உ.பி.யில் முக்தி நிலையை அடைய இளைஞருக்கு உயிருடன் சமாதி கட்டிய சாமியார்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சமாதி கட்டிய சாமியார்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தரபிரதேசம், உன்னாவோவில் அருகே 22 வயது இளைஞர் ஒருவர் முக்தி பெறுவதற்காக நிலத்தில் சமாதி அடைந்தார். அவருக்கு 3 சாமியார்கள் உயிருடன் சமாதி கட்டினார்கள்.
இது குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சமாதியை தோண்டி அந்த இளைஞரை காப்பாற்றினர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த இளைஞர் உட்பட 3 சாமியார்களையும் கைது செய்தனர்.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
A strange case of superstition has come to the fore in #Unnao, #UttarPradesh. Here a 22-year-old youth took samadhi in the ground to get salvation. However, the police reached the spot in time and saved the youth. Unnao police has arrested four sadhus in this case. pic.twitter.com/ZYc60hTxsi
— The National Bulletin (@TheNationalBul1) September 27, 2022