உ.பி.யில் வெளுத்து வாங்கும் கனமழை - பாறையை பிளந்து பயங்கர நிலச்சரிவு
உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் பயங்கர நிலச்சரிவும், சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேச கனமழை
உத்திர பிரதேசத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. உத்திரபிரதேச சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த கனமழையால் வீடுகளை இழந்து, உணவின்றி மக்கள் பரிதவித்து வருகின்றனர். வீடுகளில் புகுந்த மழை நீரால் மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத்தில் பெய்த கனமழையால் கார்கள் நீரில் மூழ்கின. பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகளை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ராஜஸ்தானை ஒட்டிய மேற்கு மத்தியப் பிரதேசம், மேற்கு உத்தரப் பிரதேசம், தெற்குப் பகுதி ஹரியானாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல பகுதிகளில் பயங்கர நிலச்சரிவும், சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ள வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Flash floods hits Uttar Pradesh, India, causing landslides and flooding.#floods #India #UttarPradeshNews #landslides #disaster pic.twitter.com/rr75dUFyEA
— Lizardman (@Lizardm42069767) September 23, 2022
Uttar Pradesh | Locals in Firozabad continue to bear the brunt of flood-like situation as their houses remain inundated after incessant rainfall pic.twitter.com/oHEZV7hOQt
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 22, 2022