உ.பி.யில் சுங்கச்சாவடி தடுப்புகளை தகர்த்துவிட்டு வரிசையாக சென்ற மணல் கொள்ளையர்கள் - அதிர்ச்சி வீடியோ...!

Uttar Pradesh
By Nandhini Sep 05, 2022 06:24 AM GMT
Report

உ.பி.யில் மணல் கொள்ளையர்கள் சுங்கச்சாவடி தடுப்புகளை தகர்த்துவிட்டு வரிசையாக செல்லும் அதிர்ச்சி வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் வீடியோ

உத்தரபிரதேசம் மாநிலம், ஆக்ராவில் டிராக்டரில் வந்த மணல் கொள்ளையர்கள், அங்கிருந்த சுங்கச்சாவடி தடுப்புகளை மிக வேகமாக தகர்த்துவிட்டு வரிசையாக சென்றனர்.

அப்போது, சுங்கச்சாவடியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அந்த டிராக்டரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோதும், கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் சுங்கச்சாவடியின் தடுப்புகளை தகர்த்துவிட்டு சென்றுள்ளனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மணல் கொள்ளையர்கள் சுங்கச்சாவடி தடுப்புகளை வேகமாக தகர்த்துவிட்டு வரிசையாக செல்லும் சிசிடிவி காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

Uttar Pradesh - viral video