தாய் கண்முன்னே லிப்டில் சிறுவனை கடித்த நாய் - பதற வைக்கும் சிசிடிவி வீடியோ வைரல்..!
தாய் கண்முன்னே 7 வயது சிறுவனை லிப்டில் வளர்ப்பு நாய் ஒன்று கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய் கண்முன்னே லிப்டில் சிறுவனை கடித்த நாய்
உத்திரபிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள லா ரெசிடென்ஷியல் சொசைட்டியின் லிஃப்டில் 7 வயது சிறுவன் தன் தாயுடன் சென்றுக்கொண்டிருந்தான்.
அப்போது, அருகில் இருந்த நபரின் வீட்டு நாய் அந்தச் சிறுவனின் கையை கடித்தது. உடனடியாக அச்சிறுவனின் தாய் மகனை இறுக்கி கட்டிப்பிடித்துக் கொண்டார்.
தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காட்சியை பார்த்தவர்களின் நெஞ்சம் சற்றே பதறி விடுகிறது.
நாட்டில் வளர்ப்பு நாய்களின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோல் லிப்டில் நாய்களை கொண்டு செல்வதை உரிமையாளர்கள் முதலில் நிறுத்துங்கள் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
लिफ्ट में बच्चे के हाथ को पालतू कुत्ते ने नोंच डाला...
— Kumar Abhishek (@active_abhi) November 16, 2022
वीडियो ग्रेटर नोएडा की वेस्ट की लॉ रेजिडेंशियल सोसायटी का है. pic.twitter.com/D1TeAhAZ7w