உ.பி.யில் 2 சிறுவர்களை மரத்தில் கட்டி கொடூரமாக தாக்கிய கும்பல்... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Feb 01, 2023 12:26 PM GMT
Report

உ.பி.யில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் கூறி 2 சிறுவர்களை மரத்தில் கட்டி வைத்து கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 சிறுவர்களை மரத்தில் கட்டி கொடூரமாக தாக்கிய கும்பல்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

உத்திரப்பிரதேசம், நூர்பூர், பாரபங்கில் 2 சிறுவர்கள் தங்கள் ஆட்டுக்கு உணவளிக்க இலைகளை சேகரிப்பது தொடர்பாக உள்ளூர் மக்களுடன் வாக்குவாதம் செய்தனர்.

அப்போது, திரிலோகி என்ற நபர், ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுவர்கள் மீது பொய்யாக குற்றம் சாட்டினார்.

இதனையடுத்து, உள்ளூர்வாசிகள் அந்த 2 சிறுவர்களையும் மரத்தில் கட்டி வைத்து ஈவு இரக்கமின்றி தாக்கியுள்ளனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை வைத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.   

uttar-pradesh-noorpur-2-boys-attack