வேறு சாதி நபரை காதலித்த மகள் - கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து சாலையில் வீசிய கொடூரத் தந்தை...!
உத்திரபிரதேசத்தில் வேறு சாதி நபரை காதல் திருமணம் செய்த பெண்ணை பெற்ற தந்தையே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகளை கொலை செய்து சாலையில் வீசிய தந்தை
உத்திரபிரதேசத்தைச் சேர்ந்தவர் நித்தேஷ். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், மகள் ஆயுஷி யாதவ் (21) வேறு சாதி நபரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து, ஆயுஷி யாருக்கும் தெரிவிக்காமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
சிறிது மாதங்கள் பொறுத்து ஆயுஷி தன் தந்தையை பார்க்க வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிற்கு வந்த ஆயுஷியை, தந்தை நித்தேஷ் யாதவ் சுட்டுக் கொலை செய்தார். இதன் பிறகு மகளின் உடலை ஒரு சூட்கேஸில் அடைத்து, மதுராவில் உள்ள சாலையில் வீசியுள்ளார்.
மதுராவில் உள்ள யமுனா விரைவுச்சாலை அருகே தள்ளுவண்டியில் சந்தேகப்படும்படி சூட்கேஸ் இருப்பதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்தனர். அப்போது, சடலமாக சூட்கேஸில் ஆயுஷி கண்டெடுக்கப்பட்டார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தந்தை நித்தேஷ்ஷையும், அவருக்கு உடந்தையாக இருந்த மனைவி மற்றும் மகனை கைது செய்தனர்.
வேறு சாதி நபரை காதலித்த மகளை கொலை செய்து உடலை சூட்கேசில் வைத்து சாலையில் தந்தை வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Killing_For_Honour
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) November 21, 2022
Ayushi Yadav (21) had left home without informing anyone. When she returned, her father Nitesh Yadav shot her dead. Her body was packed in a suitcase & thrown in #Mathura. Father has been arrested, cops questioning her mother & brother. #UttarPradesh #Delhi https://t.co/yKadaMV961 pic.twitter.com/HDh1BXpY1c