மகளின் திருமண நடைபெற இருந்த நேரத்தில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்..!

Uttar Pradesh
By Nandhini Nov 28, 2022 12:54 PM GMT
Report

மகளின் திருமண நடைபெற இருந்த நேரத்தில் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தந்தை தூக்கு போட்டு தற்கொலை

உத்தர பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் சுனில் திவிவேதி. இவர் அரவை மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 5 மகள்கள் ஒரு மகன் உள்ளனர்.

இவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் நடந்து விட்டது. 4-வது மகளான நவ்யாவுக்கு வரன் பார்த்து திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தார் சுனில். நேற்று நவ்யாவின் திருமணம் நடைபெற இருந்த சமயத்தில் சுனில், குடித்து விட்டு வந்துள்ளார். அப்போது, சுனிலை குடும்பத்தினர், மகள் திருமணத்தை வைத்துக் கொண்டு இப்படி குடித்துவிட்டு வருகிறாயே என்று திட்டியுள்ளனர்.

இதனால், மனம் உடைந்த சுனில் அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதைவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது,அவர் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சுனிலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, குடும்பத்தினர், சுனில், தன்னுடைய 3 மகள்களுக்கும் கடன் வாங்கியே திருமணம் செய்து வைத்து உள்ளார். நவ்யாவுக்கும் கடன் வாங்கி திருமணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனால், மனஅழுத்தத்தில் இருந்து வந்தார் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், இது குறித்து போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர. தந்தை தனது 4-வது மகளின் திருமண நாளில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   

uttar-pradesh-father-suicide