மின்னல் வேகத்தில் இரு குழந்தைகள் மீது ஜீப்பை மோதிய போலீஸ்... - தூக்கி வீசப்பட்ட பதற வைக்கும் சிசிடிவி காட்சி...!

Viral Video Uttar Pradesh
By Nandhini Nov 14, 2022 08:44 AM GMT
Report

உ.பி.யில் மின்னல் வேகத்தில் இரு குழந்தைகள் மீது ஜீப்பை ஏற்றிய போலீசாரின் பதற வைக்கும் சிசிடிவி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

குழந்தைகள் மீது ஜீப்பை ஏற்றிய போலீஸ்

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், உத்திரபிரதேச மாநிலம், பாக்பத்தில் பரபரப்பான தெருவில் இரண்டு குழந்தைகள் சாலையை கடந்துச் சென்றுக்கொண்டிருந்தனர்.

அப்போது, உத்திரப்பிரதேச போலீசார் வாகனம் அந்த வழியே வந்துக்கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக அந்த போலீஸ் வாகனம் சாலையில் கடந்து சென்ற இரு குழந்தைகள் மீது மோதியது. இந்த விபத்தில் குழந்தைகள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் இரு குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது குழந்தைகளின் உடல் நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சி சமூகவலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

uttar-pradesh-accident-2-childs-viral-video