ஆக்ரோஷமோ..அமைதியோ - எப்பவுமே ஹிந்தி எதிர்ப்பு தான் - உதயநிதி

Udhayanidhi Stalin Amit Shah M K Stalin Tamil nadu DMK
By Karthick Aug 05, 2023 04:44 PM GMT
Report

ஆக்ரோஷமாக வந்தாலும் அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வலுக்கும் எதிர்ப்பு 

uthayanidhi-reply-to-amit-shah

டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தி மொழி என்பது உள்ளூர் மொழிகளுக்கு போட்டி இல்லை என்றும், இந்தி மொழியை அனைவரும் எதிர்ப்பு இன்றி ஏற்க வேண்டும்" என கூறினார். இதற்கு பல தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

உதயநிதி பதில் 

uthayanidhi-reply-to-amit-shah

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். அவருடைய டீவீட்டில், ஆக்ரோஷமாக வந்தாலும் - அமைதியாக வந்தாலும், இந்தி திணிப்பை என்றைக்கும் தமிழ்நாடு ஏற்காது. பல மொழிகள் , இனங்கள், மதங்கள் என பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி கொள்கையை திணிப்பதை பா.ஜ.க.வும், ஒன்றிய அரசும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலினும் அமித் ஷாவின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.