குவைத்தில் அமெரிக்கா தூதரகம் மீது தாக்குதல்: பதற்றம் அதிகரிப்பு
அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய கூட்டுத்தாக்குதலில் அயதுல்லா அலி கமேனி குடும்பத்தினருடன் கொல்லப்பட்டார்.
இதற்கு பதிலடியாக தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது, தொடர்ந்து அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு எமீரகம், கத்தார், குவைத், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதலை அதிகரித்துள்ளது.

பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடந்து வருகிறத, குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தூதரக வளாகத்திற்குள் இருந்து தீப்பிழம்புகளும், புகையும் எழும்பின.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது, மற்றொரு புறம் ஈரானின் ஆதரவு நாடான லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
