உடைந்த கிருஷ்ணர் சிலையால் மனமுடைந்த பூசாரி- சிகிச்சை அளித்த மருத்துவர்கள்
உத்திர பிரதேச மாநிலத்தில் உடைந்த கிருஷ்ணர் சிலையை அழுத படி மருத்துவரிடம் கொண்டு சென்ற பூசாரியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்திர பிரதேச மாநிலம் ஆக்ரா அரசு மருத்துவமனையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு லேக் சிங் என்ற பூசாரி ஒருவர் உடைந்த கிருஷ்ணர் சிலையை குழந்தை போல் வைத்து கொண்டு கதறி அழுதுள்ளார்.
இதனை கண்ட மருத்துவமனை ஊழியர்கள் பூசாரியிடம் ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த பூசாரி தான் வீட்டில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு பூஜை செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது அந்த சிலை கை தவறி உடைந்துவிட்டதால் அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மருத்துவர்களிடம் பூசாரியை குறித்து கூறியுள்ளனர். பூசாரியின் கதறல் குறையாததால் வேறு வழியின்றி மருத்துவர்கள் கிருஷ்ணா என்ற பெயரில் நோயாளியின் பெயரை பதிவு செய்து உடைந்து கையை ஒட்ட வைத்து அனுப்பியுள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Devotion: Agra district hospital staff went through a perplexed situation on Friday, when a priest came wailing with an unusual request to bandage the broken arm of an idol of Laddu Gopal - the childhood form of Lord Krishna. (1/4) @pra0902 pic.twitter.com/bda3kPA4td
— Deepak-Lavania (@dklavaniaTOI) November 19, 2021
After showing some reluctance, the hospital staff, on orders of CMS Ashok Agarwal, carried out a registration in the name of 'Shri Krishna' and also bandaged the arm of the idol back. Priest left for the temple with a sigh of relief. pic.twitter.com/kxRk7vHTyB
— Deepak-Lavania (@dklavaniaTOI) November 19, 2021