பா.ஜ.க. ஆட்சியில் வீடுகளில் லட்சுமி கடாட்சமாக உள்ளது : அமைச்சர் ராஜ்நாத்சிங்
பா.ஜ.க. ஆட்சியால் வீடுகளில் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கிசான் சம்மான் நிதி, உஜ்வாலா யோஜனா, பிரதமரின் ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்களால் வீடுகளில் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்க்கட்சிகளின் சின்னங்களை விமர்சித்த ராஜ்நாத்சிங், சைக்கிளிலோ, யானை முதுகிலோ சவாரி செய்து லட்சுமி யார் வீட்டிற்கும் செல்வதில்லை என்றும், மாறாக தாமரைப்பூவில் வீற்றிருக்கிறாள் என்றும் தெரிவித்தார்.
ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதாகவும், ரஷ்யாவின் கூட்டுறவுடன் ஏ.கே. 203 துப்பாக்கிகள் அமேதியில் உற்பத்தியாகும் என்றும் ராஜ்நாத்சிங் அமேதி கூட்டத்தில் பேசினார்.