‘’ சம்சாரம் அது மின்சாரம் ’’ மனைவிக்காக லீவு கேட்ட கணவர் : வைரலாகும் கடிதம்
அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் விடுமுறை எடுப்பவர்கள் பல்வேறு காரணங்களை கூறி விடுப்பு எடுப்பது வழக்கம். அதில் சிலர் தெரிவிக்கும் காரணங்கள் இணைய தளங்களில் வைரலாகும்.
அரசு ஊழியரின் கடிதம்
கணவன் மனைவியிடையே வரும் சண்டைகள் அதனால் வரும் பிரிவு பெரும் சோகம், இந்நிலையில், உ.பி.யில் விடுமுறை கேட்டு எழுதிய அரசு ஊழியரின் கடிதம் வைரலாகி வருகிறது.
அந்த விண்ணப்பத்தில், தனது 3 குழந்தைகளுடன் மனைவி, அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் எனக்கு மனதளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வைரலாகும் கடிதம்
தற்போது கிராமத்தில் இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துவர விடுப்பு தேவைப்படுகிறது.இதனால் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை விடுப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அரசு ஊழியரின் இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சம்சாரம் ஒரு மின்சாரம் ,என நடிகர் விசு படத்தில் வரும் பாடல் வரிகள் போல , உங்கள் மனைவியிடம் அன்பினையும் மரியாதையினையும் கொடுத்து நடந்தால் வாழ்க்கை எனும் விளக்கு மங்காமல் ஒளிவீசும்.