லட்சத்தீவில் உண்மையில் நடப்பது என்ன? சசிகாந்த் செந்தில் விளக்கம்

BJP Congress Lakshadweep Sasikanth Senthil
By mohanelango May 31, 2021 06:58 AM GMT
Report

லட்சத்தீவின் நிர்வாகியாக குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரஃபுல் பட்டேலை பாஜக நியமித்திருந்தது. இவருடைய நியமனத்திற்குப் பிறகு லட்சத்தீவில் சர்ச்சைக்குரிய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கு தற்போது தேசிய அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிரஃபுல் பட்டேலை திரும்பப்பெற்று மத்திய அரசு உடனடியாக தலையிட்டு அமைதி கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துள்ளன.

லட்சத்தீவில் நடைபெற்று வரும் சிக்கல்களை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த செந்தில் ஐபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் விளக்குகிறார்.