தாய்மார்கள் 56 லட்சம் பேருக்கு ₹ 6,000-வெளியான முக்கிய அறிவிப்பு!
பிரதமரின் பேறுகால தாய்மார்கள் திட்டம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய அறிவிப்பு
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா எனப்படும் பிரதமரின் தாய்மார்கள் நல திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு மகப்பேறு பலன் கிடைக்கிறது.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தின் விதிகளை 22 டிசம்பர் 2022 அன்று அறிவித்தது. இத் திட்டத்தின் கீழ், தகுதியான கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு ₹5,000/-தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, 2023-24 நிதியாண்டின் போது, பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை 53,76,728 ஆக இருந்தது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
கறுப்பு பட்டியலில் சேர்க்கப்படும் வாகனங்கள்! உரிமையாளர்களுக்கு வெளியாகிய முக்கிய அறிவிப்பு IBC Tamil
2 ஆண்டுக்கு பின்பு சொந்த ராசியில் செவ்வாய் பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினர் யார்? யார்? Manithan