தோல்வியே சந்திக்காத குத்துச்சண்டை வீரர் போட்டியின்போது உயிரிழப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி!
இதுவரை தோல்வியே சந்திக்காத குத்துச்சண்டை வீரர் ஒருவர் போட்டியின்போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த 38 வயதான மூசா யாமக், முனிச் நகரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் உகாந்தா நாட்டை சேர்ந்த வீரர் ஹாம்சா வாண்டதராவை எதிர்கொண்டார்.
போட்டி பரபரப்பாக சென்றுகொண்டிருந்தபோது 3-வது சுற்றுக்கு முன் மூசா யாமக் குத்துச்சண்டை வளையத்திலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த மருத்துவ குழு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தது.
இதனை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மூசா யாமக் உயிரிழந்தார். அவரின் மரண செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஐரோப்பிய மற்றும் ஆசிய சாம்பியன் பட்டங்களை வென்றுள்ள மூசா யாமக் 8-0 என்ற கணக்கில் தோற்கடிக்கப்படாத வீரராக இருந்து வந்தார்.
மேலும் இவரது அனைத்து வெற்றிகளிலும் நாக்-அவுட் மூலம் பெற்றவை எந்த புகழும் இவருக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.