டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு இந்த வீரர்தான் சவாலாக இருப்பார்: உமேஷ் யாதவ் கருத்து
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணிக்கு சவாலாக விளங்கும் நியூசிலாந்து அணி வீரர் குறித்து வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் ஜூன் 18 ஆம் தேதியில் இருந்து 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
டெஸ்ட் போட்டிகளுக்கான புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இலையில் கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதனிடையே இறுதி போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் தான் இந்திய அணிக்கு நிச்சயம் சவாலாக திகழ்வார். அவரின் விக்கெட்டை விரைவாக கைப்பற்றுவதே இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.