‘நாங்க... உக்ரைனின் 2 நகரங்களை கைப்பற்றிவிட்டோம்...’ - ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிரடி அறிவிப்பு

உக்ரைன்-ரஷ்யா போர் ukraine-russia-war Russian-Backed-Rebels பதற்றம்
By Nandhini Feb 24, 2022 08:30 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு பகுதியில் முக்கிய நகரங்களில் ரஷ்யா ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது.

ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் மக்கள் பதற்றத்துடன், அச்சத்துடனும் இங்கும், அங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பெரும் பீதியுடன் காணப்படுகிறார்.

ரஷ்யா நடத்திய இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்தப் போரால் இந்திய பொருட்கள் கடுமையாக உயர வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. உக்ரைனில் சிக்கிக்கொண்டுள்ள இந்தியர்களின் நிலை குறித்து மத்திய அரசு தொடர்ந்து விசாரித்து வருகிறது. இதுகுறித்து, பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று இந்திய தூதுரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

‘நாங்க... உக்ரைனின் 2 நகரங்களை கைப்பற்றிவிட்டோம்...’ - ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அதிரடி அறிவிப்பு | Ukraine Russia War Russian Backed Rebels

இந்நிலையில், உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் வருவதை பயன்படுத்தி, உக்ரைனின் லுகான்ஸ்க் பகுதியிலுள்ள 2 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பல மணி நேரமாக உக்ரைன் மீது வான்வெளி தாக்குதல் நடத்திவந்த ரஷ்யா தற்போது, பாராசூட்கள் மூலம் நூற்றுக்கணக்கான வீரர்களை இறக்கி, நாட்டிற்குள் நுழைந்தும் தாக்குதலை தொடங்கி நடத்தி வருகிறது.