ராக்கெட் தாக்குதல்... - இது ராணுவ குற்றம்... - உச்சக் கட்ட கோபத்தில் உக்ரைன் அதிபர்

ukraine ukraine-russia-war rocket-attack president-angry ராக்கெட் தாக்குதல் உக்ரைன்-ரஷ்ய போர் உக்ரைன் அதிபர் கோபம்
By Nandhini Mar 01, 2022 09:23 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை குறி வைத்து ரஷ்ய ராணுவ வீரர்கள் பயங்கரமாக சண்டையிட்டு வருகிறார்கள்.

உக்ரைன் - ரஷ்யா போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், உக்ரைனில் உள்ள மரியபோல் நகரில் ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. இரு நாட்டு ராணுவ படைகளுக்கும் பலத்த சண்டை நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ராக்கெட் தாக்குதல்... - இது ராணுவ குற்றம்... - உச்சக் கட்ட கோபத்தில் உக்ரைன் அதிபர் | Ukraine Russia War Rocket Attack President Angry

அதேபோல், ரஷ்ய படைகள் ஆக்ரோஷமாக தாக்குதலுடன் வேகமாக முன்னேறி சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், 2-வது முறையாக உக்ரைனின் பெரிய நகரான கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது ரஷ்ய போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருவதாக அம்மாகாணத்தின் ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, கார்கீவ் நகரில் ராக்கெட் தாக்குதல் நடத்தியது பெரும் குற்றம் என்று உக்ரைன் அதிபர் உச்சக்கட்ட கோபத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.