உக்ரைன் அதிபருடன் இந்திய பிரதமர் மோடி பேசினார் - வெளியான முக்கிய தகவல்
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இந்தப் போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகிறார்கள்.
இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் அதிபரை, போனில் தொடர்பு கொண்டு இந்திய பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அப்போது, இந்திய பிரதமர் மோடி, சுமி நகரில் உள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி, உக்ரைன் அதிபருடன் 35 நிமிடம் வரை பேச்சுவார்த்தை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.