உக்ரைன் மீது தாக்குதல் எதிரொலி - ரஷ்யாவில் அனைத்து உணவகங்களை மூட மெக்டொனால்டு அறிவிப்பு

Ukraine Close McDonald's உக்ரைன் ரஷ்யா தாக்குதல் அறிவிப்பு Russia-war உணவகங்களை மூட
By Nandhini Mar 09, 2022 07:20 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது.

இதனால், ரஷ்யா ராணுவ படைகளுக்கும், உக்ரைன் ராணுவ படைகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடந்தது. இப்போரால் அப்பாவி பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, மாணவர்கள் பலர் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி அவரவர் நாடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். தற்போது, உக்ரைனில் தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பல நாடுகள் பொருளாதார தடை விதித்தள்ளது. இதனையடுத்து, ஆப்பிள், நெட்ஃபிளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

இதனையடுத்து, தற்போது மெக்டொனால்டு உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யாவில் தங்களுக்குச் சொந்தமான 850 உணவகங்களையும் தற்காலிகமாக மூடுவதாக மெக்டொனால்டு அறிவித்திருக்கிறது. இதேபோல், கோக கோலா, பெப்சி நிறுவனமும் தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளன.  

உக்ரைன் மீது தாக்குதல் எதிரொலி - ரஷ்யாவில் அனைத்து உணவகங்களை மூட மெக்டொனால்டு அறிவிப்பு | Ukraine Russia War Mcdonald S Close